அர்ஜென்டினாவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


அர்ஜென்டினாவின் சாண்டியாகோ டெல் எஸ்டெரோவில் மாகாணத்தில் உள்ள மான்டே கியூமாடோவில் அதிகாலை 3:39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது அர்ஜென்டினாவின் கார்டோபாவிலிருந்து வடக்கே 517 கிலோமீட்டர் தொலைவில், 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இது 600 கிலோமீட்டர் (372.82 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும் இந்த நிலநடுக்கம் பராகுவேவில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 point 5 Magnitude Earthquake hits Argentina


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->