தெற்கு உக்ரைனில் தீவிர தாக்குதல்: 50 ரஷ்ய துருப்புகளை அழித்த உக்ரைன் ராணுவம்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே 8 மாதங்களாக போர் நடந்து வரும் நிலையில் இரு நாடுகளிலும் உயிர் சேதங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. இப்போரில் தொடர்ந்து போராடிவரும் உக்ரைன் படைகள், ரஷ்யாவிடம் இருந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றி வருகின்றன.

இந்நிலையில் தெற்கு உக்ரைனில் நடந்த தீவிர தாக்குதலில் 50 ரஷ்ய துருப்புகளை உக்ரைன் படைகள் அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 3 பீரங்கி வாகனங்கள் மற்றும் 11 ராணுவ பாதுகாப்பு வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருங்கடல் பகுதியில் கலிபர் ஏவுகணை கப்பல்கள் உட்பட 17 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கும் பொழுது உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் கட்டிடங்கள் மீது வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

50 Russian troops destroyed by ukraine forces


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->