ஆப்கானிஸ்தான் மசூதிக்குள் துப்பாக்கிச்சூடு.! 5 பேர் பலி, ஒருவர் படுகாயம் - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதிக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மத்திய பகுதியான கவ்ஜா ரவாஷ் என்ற இடத்தில் உள்ள மசூதியில் நேற்று மதியம் வழக்கம் போல் தொழுகை நடைபெற்றது. அப்பொழுது அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் பலர் மசூதிக்கு வந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர். 

இந்நிலையில் மசூதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் தொழுகை செய்து கொண்டிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின்பு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். 

மேலும் இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் பகை இருக்கலாம் என்றும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed one injured in mosque shooting in Afghanistan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->