மியான்மரில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி, 30 பேர் காயம்
5 killed 30 injured in bus accident in Myanmar
மியான்மர் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
மியான்மர் யாங்கூன்-மண்டலே நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மைல்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு குழந்தை உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் ஸ்வா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
5 killed 30 injured in bus accident in Myanmar