4 ஆயிரம் பெண்கள் பலாத்காரம் - ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி!
4 thousand women raped Shocking report from the UN
நைஜீரியாவில் பெண்கள், சிறுமிகள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சமீபகாலமாக ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து பல்வேறு இனக்குழுக்கள், பயங்கரவாதிகள் குழுவினர், கிளர்ச்சியாளர்கள் என பலரும் சண்டை போட்டு அவர்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அப்போது குழுவினர் அவ்வப்போது அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளை சூறையாடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அங்குள்ள கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்யதில் ஏராளமானவர்கள கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதலை கட்டுப்படுத்த ஐ.நா சார்பில் அமைதிப்படை வீரர்கள் களம் இறக்கப்பட்டு உள்நாட்டு ராணுவத்துடன் போராடி வருகிறார்கள்.ஆனாலும் எந்த பயனும் இன்னும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நைஜீரியாவில் களநிலவரம் குறித்து ஐ.நா. அமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் நைஜீரியாவில் 700 பேர் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் மேலும் பெண்கள், சிறுமிகள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.
English Summary
4 thousand women raped Shocking report from the UN