நைஜர் நாட்டில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர்கள் 34 பேர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம் ..! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் ஆயுதக் குழுக்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே பல இடங்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நைஜரில் ராணுவ வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, பதில் தாக்குதல் நடத்தியதில், பயங்கரவாதிகளில் 12-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மாலி மற்றும் புர்கினா பஸோ ஆகிய நாடுகளுடனான எல்லையில் பனிபங்கோ என்ற நகரத்தில், 200-க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்களில் வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு,14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நைஜரின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

34 soldiers killed 14 injured in Niger shooting


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->