குழித்துறையில் அதிர்ச்சி.. பஸ்சுக்காக காத்திருந்த 2 குழந்தைகளின் தாயை கடத்தி பலாத்காரம் செய்த பள்ளி நண்பன்: வீட்டில் சொன்னதால் சரமாரி தாக்குதல்..!
School friend kidnapped and raped the mother of 2 children who was waiting for the bus in Kulithurai
கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவர் பிளஸ் 02 வரை படித்துள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைபார்த்து வரும் அவருக்கு திருமணமாகி 02 பிள்ளைகள் உள்ளனர். அவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் 36 வயதுடைய நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.
அவருக்கும் திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ள நிலையில், குடித்த பெண்மணியும், இந்த நபரும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தபோது நட்புடன் பழகியுள்ளனர். இந்த பழக்கம் திருமணமான பிறகும் தொடர்ந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த பெண் கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இரவு சுமார் 09.30 மணியளவில் குழித்துறை ஜங்சன் பகுதிக்கு வந்திறங்கியுள்ளார்.

குழித்துறை பஸ் நிறுத்தத்தில் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்த போது, வீட்டிற்கு அருகில் உள்ள நண்பன் காரில் அந்த வழியாக வந்துள்ளார். அப்போது, பஸ் நிறுத்தத்தில் தனது பள்ளி தோழியான குறித்த பெண் நிற்பதை பார்த்த உடனே காரை ஓரமாக நிறுத்தி வீட்டிற்கு கொண்டு விடுவதாக கூறி, அழைத்து சென்றுள்ளார்.
கார் சிறிது தூரம் சென்றவுடன் பெண்ணின் வீட்டுக்கு செல்லும் வழியை தவிர்த்து, அந்த நபர் வீட்டுக்கு செல்லும் வழியில் காரை ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது அந்த நபர் ''இவ்வளவு தூரம் வந்துவிட்டாய்.. எனது மனைவி, பிள்ளைகளை பார்த்துவிட்டு உன்னை உனது வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன் என்று கூற, அந்த பெண்ணும் சம்மதித்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, காரில் இருந்து இறங்கிய தோழியை அவசர அவசரமாக அழைத்துள்ளார்.
பின்னர், கதவை திறந்து சட்டென குறித்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து வீட்டின் உள்ளே தள்ளியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பெண் அதிர்ச்சி அடைந்துள்ளளர். எதற்காக இப்படி இழுக்கிற.. உன் மனைவி, பிள்ளைகள் எங்கே என கேட்டார்.
இங்கே யாருமில்லை… என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டாய் என என கூறி, அந்த பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
அத்துடன், அப்பெண்ணின் கழுத்தை நெரித்து, வாயை பொத்தி படுக்கையறைக்கு கொண்டு சென்று, கட்டிலில் தள்ளிவிட்டு அவரது ஆடைகளை வெறித்தனமாக கழற்றி எறிந்துள்ளார். அந்தச் பெண்ணால் போராடியும் முடியவில்லை. இதையடுத்து அந்தச் பெண்ணை அந்த நபர் பலவந்தமாகபலாத்காரம்செய்துள்ளார்.
இதையடுத்து கதறிய பெண்ணிடம் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் உன்னையும், உனது பிள்ளைகளையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் வலுக்கட்டாயமாக மீண்டும் காரில் ஏற்றி சென்று ரேவதியின் வீடு அருகே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

இந்த சம்வபத்தை தொடர்ந்து அந்தச் பெண் பெரும் மனா உளைச்சலில் இருந்துள்ளார். தொடர்ந்து நேற்றைய தினம் அந்த பெண் அந்த நபரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது மனைவி, சகோதரி மற்றும் தாயார் இருந்துள்ளனர். அவர்களிடம் நடந்த விபரத்தை கூறி கதறியுள்ளார்.
ஆனால், அதனை ஏறுக்கொள்ளாத அந்த நபரின் சகோதரி இந்த பெண்ணை செருப்பை கழட்டி அடித்துள்ளார். இதையடுத்து சம்மந்தப்பட்ட நபரும், குறித்த பெண்ணை சரமாரி தாக்கி கீழே தள்ளியதோடு வயிற்றில் மிதித்துள்ளார். இதில் காயமடைந்த பெண்அங்கிருந்து அழுதவாறு தப்பி வந்துள்ளார்.
இதையடுத்து ரேவதி குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை தாக்கிய நபர் அவரது அக்கா ஆகியோர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குறித்த பெண் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நண்பனே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
School friend kidnapped and raped the mother of 2 children who was waiting for the bus in Kulithurai