ஆண்டிபட்டி அருகே மர்ம கும்பல் துணிகரம்: வனப்பகுதியில் மரம் வெட்டிய கடத்தல்காரர்களுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, மயிலாடும்பாறை அருகே உள்ள தாழையூத்து மலைப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து, வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். 

அந்தப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட சாலிமரம், உசிலை மரம், தோதகத்தி உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டு கிடந்தன. விசாரணையில், முதல்கட்டமாக மர்மகும்பல் இந்த மரங்களை வெட்டி கடத்திச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பின்னர், வனத்துறையினர் அந்தப் பகுதியில் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது, வனப்பகுதிக்குள் டிராக்டர் சென்று வரும் வகையில் பாதை அமைத்து மரங்களை வெட்டி கடத்திச் சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கண்டமனூர் வனச்சரக அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மரங்களை வெட்டி கடத்திய மர்மகும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், வருசநாடு சுற்று வட்டார பகுதிகளில் சாலை உள்ளிட்ட அரசின் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் வனத்துறையினர் தடை விதித்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அங்கு அடர் வனப்பகுதிக்குள் மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police net smugglers who cut down trees in the forest near Andipatti


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->