ஈரானில் சிக்கியுள்ள 6,000 மீனவர்களை மீட்க நடவடிக்கை: திருநெல்வேலி ஆட்சியரை சந்தித்த நயினார் நாகேந்திரன்..!
Nainar Nagendran met the Tirunelveli Collector regarding the 6000 southern district fishermen trapped in Iran
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே கடந்த 08 நாட்களாக போர் நடந்து வருகிறது. இது உலக நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டு பிரஜைகள் நாடு திரும்புவதில் கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.
ஈரானில் உள்ள மாணவர்களை அழைத்து வர மத்திய அரசும், இந்திய தூதரகமும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், ஈரானில் உள்ள தென் மாவட்ட மீனவர்கள் 6,000 பேரின் தகவல்களை சேகரிக்குமாறு திருநெல்வேலி ஆட்சியரை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் ஈரானில் இருக்கின்றனர் என்ற செய்தி அறிந்ததும் அவர்களைப் பற்றியான தகவல்களை சேகரித்திட இன்று முதற்கட்டமாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டரைச் சந்தித்து கலந்தாலோசித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திடமும் முறையிட்டு நமது இந்திய மீனவர்களைப் பாதுகாப்புடன் மீட்டுக் கொண்டு வர தமிழக பா.ஜ., உறுதியுடன் செயல்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
English Summary
Nainar Nagendran met the Tirunelveli Collector regarding the 6000 southern district fishermen trapped in Iran