ரஷ்யாவுக்கு உதவிக்கரம் நீட்டிய வடகொரியா: 06 ஆயிரம் ஊழியர்களை அனுப்ப உறுதி..! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனை மீண்டும் கட்டமைக்க பொறியாளர்கள் மற்றும் ராணுவ ஊழியர்கள் அடங்களாக 06 ஆயிரம் பேரை அனுப்ப வட கொரியா முடிவு செய்துள்ளதாக ரஷ்யா அரசு உறுதி செய்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட உலக நாடுகள் நடந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகழளும், ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா உள்ளிட்ட சில நாடுகளும்  செயல்படுகின்றன. 

இரு நாடுகளுக்கிடையிலான போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன், பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியா செயல்படுகிறது. அந்நாட்டை சேர்ந்த வீரர்கள் ரஷ்யா உடன் இணைந்து போரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை கட்டமைக்கும் பணியில் அந்நாடு இறங்கியுள்ளது. அதற்கு உதவ ஆயிரம் ராணுவ பொறியாளர்கள் மற்றும் 05 ஆயிரம் ராணுவ ஊழியர்களை அனுப்பி வைக்க வட கொரியா முடிவு செய்துள்ளது.  அவர்கள் உக்ரைன் ராணுவத்தால் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை கட்டமைப்பார்கள் எனவும், உக்ரைன் தாக்குதலில் உயிரிழந்த வட கொரியா வீரர்களுக்கு ஆதரவாக நினைவுச் சின்னம் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

North Korea confirms sending 6000 workers to Russia


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->