அர்ஜென்டினாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து.! 3 பேர் பலி
3 died in explosion of oil refinery factory in Argentina
அர்ஜென்டினாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்கா நாடான அர்ஜென்டினாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நியூகன் மாகாணத்தில் உள்ள நியூ அமெரிக்கன் ஆயில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எதிர்பாராத விதமாக கச்சா எண்ணெய் தொட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய் தொட்டி தீ பற்றியதில் அடுத்தடுத்த தொட்டிகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 6 தொட்டிகள் மற்றும் 6 டேங்கர் லாரிகள் முழுவதுமாக எரிந்தது நாசமாகின.
இதையடத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர் மற்றும் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த விபத்தில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
3 died in explosion of oil refinery factory in Argentina