சூடானில் கோர விபத்து : லாரி மீது பேருந்து மோதி 16 பேர் பலி.! 19 பேர் காயம் - Seithipunal
Seithipunal


சூடானில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் 16 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சூடானின் வடக்கு டார்பூர் மாகாணத்தின் தலைநகரான ஃபேஷரில் இருந்து கார்டூமின் நோக்கி பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார்ட்டூமின் இரட்டை நகரமான ஓம்டுர்மானில் பேருந்து சென்றபோது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிக்கெட்டு ஓடியது.

பின்பு சாலையை விட்டு விலகி நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 16 உயிரிழந்து உள்ளனர். மேலும் 19 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஓம்டுர்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து விபத்தில் இறந்தவர்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

16 killed 19 injured in parked Truck bus collision in sudan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->