சீனாவில் 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! 10 பேர் காயம்.!
10 injured in earthquake of china
சீனாவில் 5.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள பாவோஷனில் நேற்று முன் தினம் இரவு 11.27 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லாங்யாங் மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் பாவோஷனில் பகுதியில் 10 பேர் சிறு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நிலநடுக்கத்தின் மையத்திற்கு அருகிலுள்ள சுமார் 2,800 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பாவோஷனின் துணை மேயர் ஜாங் யுனி தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
English Summary
10 injured in earthquake of china