எச்சரிக்கை! தமிழ்நாட்டில் வெயிலில் தாக்கம் அதிகரிக்க அதிக வாய்ப்பு...! - சென்னை வானிலை ஆய்வு மையம்
Warning There high possibility increased heatwave Tamil Nadu Chennai Meteorological Department
தற்போது தென்மேற்கு பருவமழை குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் தீவிரம் அடைந்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதை காண முடிகிறது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.அதிலும் இன்று (வியாழக்கிழமை) இயல்பைவிட 2° வரை வெப்பம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84° (38.8 செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது.இதைத் தொடர்ந்து, வரும் நாட்களிலும் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச்சலனத்தால் மழை என்ற சூழ்நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் நிறைவு பெறும் வரையில் இதே வானிலை தான் நிகழக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Warning There high possibility increased heatwave Tamil Nadu Chennai Meteorological Department