இடி, மின்னலுடன் கூடிய மழை இன்று தமிழகமெங்கும்! - வானிலை மையம் எச்சரிக்கை...!
Thunderstorms and lightning across Tamil Nadu today Meteorological Department warns
தமிழக வானம் மீண்டும் மேகமூட்டத்தால் சூழ்ந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி ஆகியவை இணைந்து, வானிலை மாற்றத்திற்கு வழிவகுக்கின்றன.

இதன் தாக்கமாக, இன்று (அக்டோபர் 18, 2025) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருவதால், இன்று முழுவதும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Thunderstorms and lightning across Tamil Nadu today Meteorological Department warns