தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! 
                                    
                                    
                                   Tamilnadu Rain Alert Weather update 29 09 2024
 
                                 
                               
                                
                                      
                                            இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களிலும், நாளை 9 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
இது குறித்து அந்த அறிவிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 
அதன்படி, ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. 
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Tamilnadu Rain Alert Weather update 29 09 2024