தமிழகத்தில் வானம் மீண்டும் மேகமூட்டம்! இன்று மதியம் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை எச்சரிக்கை தெரியுமா...?
sky cloudy again Tamil Nadu Do you know which districts under rain warning1 pm today
வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர தாழ்வாக வலுப்பெற்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், வானிலை மாறுபாட்டினால் அந்த அமைப்பு திடீரென பலவீனமடைந்து, மிதமான காற்றழுத்த தாழ்வாகவே தற்போது நீடிக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் எதிர்பார்க்கப்பட்ட கனமழை பல இடங்களில் பொழியாமல் போனது.இந்நிலையில், வங்கக் கடலில் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. இது தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் தாக்கத்தால், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், புதுவை மற்றும் காரைக்காலிலும் மழை வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில், மதியம் 1 மணி வரை மாநிலத்தின் 23 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில்," நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை,சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி,மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
English Summary
sky cloudy again Tamil Nadu Do you know which districts under rain warning1 pm today