சுட்டெரிக்கும் சூரியன்... சுருண்டு விழுந்த மனிதர்கள்...! - தெலுங்கானாவில் ஒரே நாளில் 16 உயிர்களைப் பறித்த வெயில் கொடுமை...!
scorching sun people curled up heatwave that claimed 16 lives single day Telangana
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை கடுமையாக வீசி வரும் நிலையில், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வடஇந்தியா மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் வெப்பத்தின் தீவிரம் உச்சத்தை எட்டியுள்ளதாகவும், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரியை தாண்டி பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேபோல் தெலுங்கானா மாநிலத்திலும் அனல் காற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் வெயிலின் கொடூர தாக்கத்தால் 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதில் வாரங்கல் மாவட்டத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்ததாகவும், அங்கு அதிகபட்சமாக 46.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மகபூப்நகர் மாவட்டத்தில் 3 பேரும், ஜெய்சங்கர் பூபால பள்ளி மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் வெப்ப அலை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
scorching sun people curled up heatwave that claimed 16 lives single day Telangana