இன்றும் ரெட் அலெர்ட்! கோவை, நீலகிரி மாவட்ட மக்களே உஷார்...! - Seithipunal
Seithipunal


ரெட் அலர்ட் என்ற அதிக கனமழைக்கான எச்சரிக்கை, ஏற்கனவே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தின.

இதில் நேற்று முன்தினம் இரவு முதலே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை கொட்ட தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை நேற்றும் நீடித்தது.

இந்நிலையில்  வானிலை ஆய்வு மையம், அதிகனமழை வரை பதிவாகும் என்பதால் கோவை மற்றும்  நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் (திங்கட்கிழமை) சிவப்பு எச்சரிக்கை( red alert ) விடுக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்:

இதன் தொடர்ச்சியாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது,"இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது" என்று  தெரிவித்துள்ளது.

ஆகையால் மக்கள் சூழ்நிலை கருதி முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Red alert today too People of Coimbatore and Nilgiris districts beware


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->