தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.!
rain to six districts in tamilnadu
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வட மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் தற்போது வரை மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
rain to six districts in tamilnadu