அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை.!
rain to eight districts in tamilnadu
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை உட்பட எட்டு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
rain to eight districts in tamilnadu