24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை..! வானிலை ஆய்வு மையம்...!
Rain in 24 districts of tamilnadu for next 3 hours
தமிழகத்தில் 5 நாட்களுக்கு தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 24 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
மேலும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Rain in 24 districts of tamilnadu for next 3 hours