டில்லியில் போராட்டத்தை தடுத்த போலீசாரை தாக்கிய ஜேஎன்யூ பல்கலை மாணவர்கள் 28 பேர் அதிரடி கைது..!
28 JNU students arrested for attacking police who stopped protest in Delhi
டில்லியில் ஜேஎன்யூ பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தடுக்க முயற்சித்த போலீசாரை தாக்கிய மாணவர் சங்கத் தலைவர் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று மாலை மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள், நெல்சன் மண்டேலா சாலையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்கள் அதையும் மீறி பேரணி செல்ல முயன்றனர். இதனால், போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், மாணவர்கள் சிலர் போலீசாரை சரமாரியாக தாக்கியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மாணவர்கள் தாக்கியதில் 06 போலீசார் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, மாணவர் சங்கத் தலைவர் நிதேஷ் குமார், துணை தலைவர் மணிஷா உள்பட 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் செயலைக் கண்டித்து ஜேஎன்யூ மாணவர்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த மாதம் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்கலைகழக வளாகத்தில் வலதுசாரி ஆதரவு ஏபிவிபி சங்கத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், இடதுசாரி சங்கங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் தசரா பண்டிகை முதல் மோதல் நீடித்து வருகிறது.
இதில் போலீசார் ஏபிவிபி மாணவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, இடதுசாரி அமைப்புகளின் ஆதரவு பெற்ற மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சித்த போது அவர்களை போலீசார் தடுத்த நிலையில் இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
28 JNU students arrested for attacking police who stopped protest in Delhi