அடுத்த 3 நாட்களுக்கு தொடர் கனமழை.! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!
rain from sep 23 to 25
இந்திய வானிலை ஆய்வு மையம் அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு தொடர் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேற்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. மகாராஷ்டிராவின் மும்பையில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது.
இந்த நிலையில், புதன்கிழமை இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. அதன்படி, செப்டம்பர் 23 முதல் 26 ஆம் தேதி வரையில் மேகாலயா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கோவா மற்றும் குஜராத்தின் சில பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.