ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.. சென்னையில் கொட்டி தீர்க்கும் மழை.!!
nov 18 weather update
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறாது என்று நேற்று வரை கணிக்கப்பட்ட நிலையில் இன்று வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, இன்று தெற்கு ஆந்திரா வட தமிழக கடற்கரை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. மேற்கு திசையில் நகர்ந்து நாளை வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளை வந்தடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, பலத்த காற்றுடன் சென்னையின் பட்டினப்பாக்கம், மெரினா, மயிலாப்பூர், மந்தைவெளி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், சைதாப்பேட்டை, ராயப்பேட்டையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.