தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!   - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் 29 ம்தேதியிலிருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கி, பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

இதன் காரணமாக, தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, குமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மிதமான மழையும்,

சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

northeast rain twelve district rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->