தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!   - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் 29 ம்தேதியிலிருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கி, பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

இதன் காரணமாக, தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, குமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மிதமான மழையும்,

சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

northeast rain twelve district rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->