சென்னையில் இரவோடு இரவாக புரட்டியெடுத்த கனமழை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. 

சென்னையில் வானம் மாலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. 

இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை காலை அதிகாலை 4 மணி வரை கொட்டித் தீர்த்தது. தற்போது சென்னையில் குளிர்ச்சியான சூழலை நிலவுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் புகுந்து உள்ளதால் வெளியேற்றம் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jun 19 rain in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->