வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை!
IMD Alert new low pressure area Bay of Bengal Tamilnadu heavy rain alert
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வால் தமிழகத்தில் மழை பெய்யும் நிலையில், மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவம்பர் 22-ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தென்-கிழக்கு வங்கக்கடலில் உருவாகி, மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
மழை முன்னறிவிப்பு
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் தற்போதைய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று (நவ. 17):
கன முதல் மிக கனமழை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை: கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் பெய்ய வாய்ப்புள்ளது.
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
நவம்பர் 22-ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால், நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
IMD Alert new low pressure area Bay of Bengal Tamilnadu heavy rain alert