மீண்டும் மழை அட்டகாசம்? வங்கக்கடலில் உருவாகும் புதிய தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு!
Heavy rains again new depression forming Bay of Bengal potential turn into cyclone
தென்குமரிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாக்கத்தால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக, இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், தென்மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல் மற்றும் இலங்கை அருகுப் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சாத்தியம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது மேற்கு–வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, இந்த மாதம் 27ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புயலாக தீவிரம் அடையக்கூடும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.
English Summary
Heavy rains again new depression forming Bay of Bengal potential turn into cyclone