கொட்டி தீர்த்த கனமழை.. ரெட் அலர்ட்.. மீண்டும் தலைநகரை புரட்டி எடுக்கப்போகும் கனமழை.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல் நவி மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தால், பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

மும்பை நகருக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மோசமான வானிலை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக மழை குறைந்த நிலையில், மீண்டும் நேற்று முதல் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதியில் தொடர்ந்து கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, நவிமும்பை, பால்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain red alert in mumbai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->