குஷியோ குஷி! 21 மாவட்டங்களுக்கு மாலை 6 மணி வரை கனமழை...! - சென்னை வானிலை ஆய்வு மையம்
Heavy rain in 21 districts till 6 pm Chennai Meteorological Department
சென்னை மாநகராட்சியில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில்,எதிர்பாராதவிதமாக திடீரென மழை பெய்து வருகிறது.மேலும், சென்னையில் கோயம்பேடு,நெற்குன்றம், மதுரவாயல்,போரூர்,வளசரவாக்கம், வானகரம், ஐயப்பந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதில் புறநகர் பகுதிகளான திருவேற்காடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.குறிப்பாக வானிலை ஆய்வு மையம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் காஞ்சிப்புரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், சேலம்,அரியலூர், திருவண்ணாமலை,கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பத்தூர்,நாகை, புதுக்கோட்டை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் வெயிலுக்காக சாலையில் போக்குவரத்து காவல்துறையால் அமைக்கப்பட்ட பந்தல் மலைக்காற்றில் சரிந்தது. இதனால், ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Heavy rain in 21 districts till 6 pm Chennai Meteorological Department