வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 07 மாவட்டங்களில் கனமழை: கோவை, நீலகிரிக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்' ..!
Heavy rain in 07 districts today and Orange Alert for Coimbatore and Nilgiris
தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கோவை, நீலகிரிக்கு மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிக்கு அப்பால், மத்திய மேற்கு வங்கக்கடலில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அத்துடன், கோவை, திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்களில், நாளை மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் 16 வரை, பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Heavy rain in 07 districts today and Orange Alert for Coimbatore and Nilgiris