உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. அதீத கனமழைக்கு வாய்ப்பு.!!
depression in bay of bengal
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, நாளை உருவாகும் என கூறப்பட்ட நிலையில் இன்றே உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராயப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. இதனிடையே வட மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வட மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
depression in bay of bengal