அடுத்த "24 மணி நேரத்தில் புயல்" உருவாகும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
A storm will form in the next 24 hours in Arabian sea
கடந்த சில நாட்களாக லட்சத்தீவு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கின. இதன் காரணமாக கேரளாவில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே போன்று தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
அரபிக் கடலில் ஜூன் 7ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது லட்சத்தீவு ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவானது.
இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
A storm will form in the next 24 hours in Arabian sea