தமிழகத்தில் 3 நாட்களுக்கு 40 டிகிரி செல்சியஸ் வரை "வெப்பம்" நிலவக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
40 degrees Celsius heat may prevail in Tamil Nadu
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் நாளையுடன் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 30ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
English Summary
40 degrees Celsius heat may prevail in Tamil Nadu