Viral video || இது புதுசா இருக்குண்ணே.. ஜோதி மணியை பீப்பி ஊதி விரட்டி அடித்த பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் கரூர் நாடாளுமன்ற தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரூர் நாராயண மன்ற தொகுதியின் தற்போதைய உறுப்பினர் ஜோதிமணிக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 

ஆனால் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் கூட்டணி கட்சியான திமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சயில் இருந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. அதே வளையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிக்கச் செல்லும் இடமெல்லாம் அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. 

அந்த வகையில் கரூர் மாவட்டம் மருங்காபுரி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அடைக்கம்பட்டியில் வாக்கு சேகரிப்பதற்காக ஜோதிமணி சென்றுள்ளார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் சிறுவர்கள் விளையாடும் பீப்பியை ஊதி ஜோதிமணி பிரச்சாரம் செய்யவிடாமல் துரத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Public chance away Karur Congress candidate jothimani


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->