சிறுவர்களை வைத்து ஆபாச ரீலிஸ் ; போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட யூடியூபர் திவ்யா மற்றும் சிலர்..! - Seithipunal
Seithipunal


யூடியூபர் திவ்யா மீது சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, திவ்யா உள்ளிட்ட 04 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகே சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபடுத்தி, அதனை ரீல்ஸ் எடுத்த குற்றச்சாட்டில் இவர்களை கைது செய்துள்ளனர். 

தஞ்சையைச் சேர்ந்த யூடியூபர் திவ்யா மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த அவரது நண்பர் கார்த்தி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரீல்ஸ் எடுத்துள்ளனர். 

தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சித்ரா என்பவர், யூடியூபர் திவ்யா சிறுவர்களுடன் இணைந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்று வீடியோவை எடுத்துத் தருமாறு நண்பர் கார்த்தியிடம் கூறியிருக்கிறார்.

அதன்பேரில், சிறுவர்களை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, யூடியூபர் திவ்யா, கார்த்தி மற்றும் ஆனந்த், சித்ரா ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் சித்ரா என்பவர் தான், திவ்யாவிடம் பணம் பறிப்பதற்காக இது மாதிரியான வீடியோக்களை எடுக்க சொல்லி இருப்பதாக தெரிய வந்தது.

சிறுவர்கள் மைனர் என்பதால் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 04 பேர் மீதும் போக்சோ உட்பட 06 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

YouTuber Divya made a pornographic release using children


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->