ரயிலில் 11½ கிலோ கஞ்சா கடத்திய இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரளாவுக்கு சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதை தடுப்பதற்காக ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பாணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு வழியாக கேரளாவுக்குச் சென்ற தான்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று காலை ஈரோடு ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

அப்பொழுது பயணிகள் இருக்கைக்கு கீழ கிடந்த ஒரு பையை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், ரயிலில் கஞ்சா கடத்திய மதுரை மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் தென்னரசை (20) கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து 11½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth who smuggled Cannabis in the train was arrested in erode


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->