கடலூரில் பயங்கரம்: வாலிபர் கழுத்தறுத்து கொலை.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் வாலிபர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி(26). இவர் வழக்கம் போல் நேற்று இரவு வீட்டு வெளியே படுத்து தூங்கினார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி இன்று காலை வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் கிருஷ்ணமூர்த்தி மர்ம நபர்களால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன்விரோத காரணமா என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth murder by throat slit in Cuddalore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->