ஆவடி அருகே பரிதாபம்.! தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி பலி.!
Youth killed in train collision in near avadi
ஆவடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வங்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). இவரும், இவரது தம்பி ராஜும் ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீடு எடுத்து தங்கி சென்னையில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அஜித்குமார் ஆவடி-அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார்.
அப்பொழுது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் எதிர்பாராதவிதமாக திடீரென அஜித்குமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி ரயில்வே போலீசார், அஜித் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth killed in train collision in near avadi