சென்னை || பழிக்கு பழியாக நடந்த கொலை? காவல்துறையினர் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


பழகிக்கு பழியாக ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். ரவுடியான இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. சம்பவதன்று, ராஜ்குமார் நேற்று இரவு 10மணி அளவில் நெற்குன்றம் மந்தைவெளி தெரு வழியாக இருசக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு ஒருவரை கொலை செய்தார். 

சிறையில் இருந்து சில மாதங்களுக்கு முன் வெளியில் வந்துள்ளார். பழிக்கு பழியாக கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Killed In Thiruverkadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->