திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய இளைஞர் கொலை.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் ராபின். இவர் நேற்றிரவு அவரது பகுதியில் நடந்த திருமண நிகழ்விற்கு சென்று விட்டு அவரது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று ராபினை வழிமறித்தனர். அரிவாள் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth killed in thiruvallur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->