பட்ட பகலில் வெட்டி கொல்லப்பட்ட இளைஞர்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி ஸ்மபவம்..! - Seithipunal
Seithipunal


வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, பூந்தமல்லி அடுத்த புளியம்பேடு பகுதியில் இளைஞர் ஒருவர் கேபிள் ஒயரை வைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டி கொன்றனர். தப்பியோட முயன்ற அவரை துரத்தி சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைசெய்யபட்டவரின் முகம் சிதைந்து போனதால் அவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Killed in Chennai


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->