சரக்குடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்... பாட்டில் குத்தி உயிரிழப்பு.! சேலத்தில் பரிதாபம்..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் சரக்குடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மது பாட்டில் குத்தி உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆரத்தி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (23). இவர் தலைவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு நண்பர் ஜெகதீஸ்வரன் என்பவருடன் சென்றுள்ளார். இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் மது குடித்துவிட்டு, மேலும் இரண்டு மது பாட்டில் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

இதில் சூர்யா மது பாட்டில்களை இடுப்பு பகுதியில் வைத்திருந்த நிலையில், தலைவாசல் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வந்தபோது, பட்டுக்கோட்டை இழந்து மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சூர்யா வைத்திருந்த மது பாட்டில் உடைந்து அவரது வயிற்றில் குத்தியூள்ளது. மேலும் ஜெகதீஸ்வரனுக்கு கை முறிவு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் இரண்டு பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சூர்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஜெகதீஷ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth killed by stabbing in liquor bottle in salem


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->