ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த வாலிபர்.! காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்தபோது வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலம் வெங்கட்டரெட்டி பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாசர் ரெட்டி. இவரது மகன் மணிகண்ட ரெட்டி(22). இவர் நண்பர்கள் 15 பேருடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்துள்ளார். இதையடுத்து பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் ஆலம்பாடி பரிசல் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க வந்துள்ளனர்.

இந்நிலையில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்த மணிகண்ட ரெட்டி எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதனால் அவர் பரிதாபமாக நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மணிகண்ட ரெட்டியை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியாததால் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பரிசல் ஓட்டிகளின் உதவியுடன் மணிகண்ட ரெட்டியை பிணமாக கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth dies after drowning in hogenakkal Cauvery river


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->