கோயம்புத்தூர் || பிறந்தநாள் அன்றே இளைஞருக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


பிறந்த நாள் அன்று இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏறோடுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், தேவராயம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் அங்குள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். சம்பவதன்று, அவரது பிறந்தநாள் கொண்டாடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலையின் எதிரே வந்த கார்  இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சரவணன் பலத்தகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாள் அன்று இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth death In Coimbatore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->