நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


என். எல். சி தொழிலாளர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி.  இவர் நெய்வேலியில் உள்ள என்.எல். சி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு நாளை மறுநாள் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான வேலைகளில் வீரமணி குடும்பத்தினர் ஈடுப்பட்டு வந்தனர்.

திருமணத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி விட்டு வீரமணி வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கடலூரில் விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து வீரமணியின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், பலத்தகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Death In accident Near Cuddalore


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->