சென்னை || இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞர்கள் பலி..!
Youth Death in Accident
சாலை விபத்தில் இரு இளைஞர்கல் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூர் கொட்டிவாக்கம்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரும் அவரது நண்பர் யோகேஷூம் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் புதுவை வந்தனர். புதுவையில் இருந்து சென்னை நோக்கி திரும்ப கொண்டிருந்தனர். அப்போது மஞ்ச குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மரக்காணத்திலிருந்து புதுவை நோக்கி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த யோகேஷை மீட்டு மருத்துவம நைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.