செல்போன் ஆப் மூலம் மாணவியின் செயலை கண்காணித்த வாலிபர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கணினி மையத்தில்  முகமது அப்ரித் என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த மையத்திற்கு நீடுர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாஸ்போர்ட் பதிவு செய்வதற்காக சென்றுள்ளார்.

அவரிடம் முகமது அப்ரித் பாஸ்போர்ட் பதிவு செய்வதற்கு அவரது செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். இதையடுத்து அந்த மாணவியும் தனது செல்போனில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இந்த செயலியை பயன்படுத்தி முகமது அப்ரித், தனது செல்போனில் இருந்து அந்த மாணவியின் செல்போனை இணைத்து அவருக்கே தெரியாமல் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மாணவியின் செல்போனில் விரைவாக சார்ஜ் குறைவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதால் மாணவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த மாணவி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், முகமது அப்ரித், கல்லூரி மாணவியின் செல்போனில் பதிவிறக்கம் செய்த செயலியை பயன்படுத்தி அவரை கண்காணித்து வந்ததும், இதேபோன்று மேலும் 3 மாணவிகளின் செயல்பாடுகளையும் அவர் கண்காணித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அப்ரித் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested for watching girls activities from mobile app in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->