கடனை அடைப்பதற்காக மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் கடனை அடைப்பதற்காக மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமீலா (72). இவர் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஆலந்தூர் பொன்னியம்மன் கோவில் அருகே சென்ற போது மர்ம நபர் ஒருவர் ரமீலா கழுத்தில் இருந்த 10 கிராம் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ரமீலா பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட போலீசார், ஆலந்தூரில் சந்தேகப்படும்படியாக சுற்றிய திருநெல்வேலியை சேர்ந்த பாலா (25) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

பட்டதாரி வாலிபரான இவர் மூதாட்டி இடம் சங்கிலிப் பொறுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இது குறித்து விசாரணையில், செல்போன் செயலின் மூலம் பெற்ற கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டியாக ரூபாய் 2 லட்சம் வரை கடனானதால் அதனை அடைக்க நண்பரை பார்க்க வந்த இடத்தில் மூதாட்டியின் சங்கிலி பறித்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து பாலாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 கிராம் தங்க சங்கிலி பறிமுதல் செய்தனர். பின்பு பாலாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth arrested for stealing jewelry from old woman in Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->